ராஜித அரசாங்கத்திற்கு செல்வது குடும்பப் பிரச்சினையை தீர்க்கவே : சுஜீவ சேனசிங்க.

நினைவு தெரிந்த காலம் முதல் பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுக்காக மறைமுகமாகவும் நேரடியாகவும் நின்று ஜனாதிபதிகளையும் அரசாங்கங்களையும் உருவாக்க செயல்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன இன்று எதையும் அறியாதவர்கள் போல நடந்து கொண்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது என SJB கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார பொறுப்பாளரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு இணைய சேனலுடனான நேர்காணலில் கலந்து கொண்ட அவர், நாட்டில் நடந்த பெரும் வீழ்ச்சிக்கு பொறுப்பான நான்கு குழுக்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார்.
புலிகள் இயக்கம், ஜனதா விமுக்தி பெரமுன, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் ஆரம்பம் முதலே ஒப்பந்தங்கள் செய்து அரசியல் நடத்திய ரணில் விக்ரமசிங்க ஆகியோரே அந்த நான்கு குழுக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜித சேனாரத்ன, SJB கட்சியை விட்டு வெளியேற தயாராகிறார் என்ற செய்திகள் குறித்து கேட்கப்பட்டபோது, சேனாரத்ன அவ்வாறு கட்சியை விட்டு வெளியேறினால், அது அவரது குடும்பத்தைப் பாதிக்கும் ஏதோ ஒரு காரணத்தால் நடக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.