அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் தொடர்பில் அவர்களை மீண்டும் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதனிடையே, அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் பிரதானிகளையும் கொழும்புக்கு அழைத்து தேர்தல் சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.