மொட்டு வேட்பாளரை போடுவது மிகவும் சரியானது – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரியான முறையில் தனி வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போதைய ஜனாதிபதியை நியமிக்கும் தீர்மானத்திற்கு தம்மை குற்றம் சுமத்திய பலர் தற்போது அவரை புகழ்ந்து பாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானத்திற்கு மாறாக செயற்பட முடியாது.

தனிநபர்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.