ஜேவிபி குவைத் இசை நிகழ்ச்சிக்கு சென்ற இலங்கை கலைஞர்கள் உட்பட 24 பேர் அங்கு கைது!

குவைத்தில் நேற்று (02) இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏற்பாட்டாளர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியை ஜனதா விமுக்தி பெரமுனாவின் இணைந்த அமைப்பான “எதெர அபி” ஏற்பாடு செய்துள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு இக்குழுவை விரைவில் விடுவிக்க குவைத் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அமைச்சர் “எக்ஸ்” செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.