பாரளுமன்ற சாலையில் கார் மோதிய பயங்கர விபத்தில் இருவர் பலி! (காணொளி)

நேற்று (03) காலை பாராளுமன்ற வீதியில் உள்ள ரணவிரு நினைவு தூபிக்கு அருகில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெலவத்தை பகுதியிலிருந்து பொல்துவ வீதி சந்தி நோக்கி பயணித்த கார் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேனுடன் மோதி, மரத்தில் மோதியதில் கார் இரண்டாக உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பலத்த காயமடைந்த பின் இருக்கையில் பயணித்த இரு இளைஞர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேனில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave A Reply

Your email address will not be published.