பொஹொட்டுவவின் தேசிய அழைப்பாளரும் ரணிலுடன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் ரோஹித அபேகுணவர்தனவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட மக்கள், மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் ,
“ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு நாடு இந்த நாட்டைக் கொடுப்பதா? காலை மாலை என்ன பேசுவது என்று தெரியாத சஜித்துக்கு 22ஆம் தேதி இந்த நாட்டைக் கொடுப்பதா? இந்தத் தலைவர்களுக்கு நாட்டைக் கொடுப்பீர்களா? நாட்டுக்காக ஒரு முடிவை எடுங்கள், நான் உங்கள் கருத்தைக் கேட்டு, நாட்டுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு தயாராகி வருகிறேன்” என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.