வன்னி மாவட்டத்தின் ஆதரவும் ரணிலுக்கு!

இந்த ஜனாதிபதித் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் பிரதேச அரசியல் தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தலைமையில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் பிரதேச அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (04) வவுனியாவில் நடைபெற்றது. இதில் அவர்கள் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக ஒப்புக் கொண்டனர். அங்கிருந்த அனைத்து பிரதிநிதிகளும் கைகளை உயர்த்தி இதை அங்கீகரித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, வடக்கு கிழக்கு மக்களும், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கட்சி வேறுபாடுகளின்றி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட ஜனாதிபதி எதிர்பார்க்கிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.