ஜனாதிபதி தேர்தலில் இருந்து தம்மிக்க பெரேரா விலகல்?

தொழில்முனைவோர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட விஷயமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

பொஹொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர் நாளை (07) காலை 7.30 மணிக்கு அறிவிக்கப்படவிருந்தது.

கொழும்பில் உள்ள நெலும் பொக்குண திரையரங்கிற்கு முன்பாக விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த இடத்தை மாற்றி நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

போஸ்டர் பிரச்சாரமா?

தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என நேற்று (5) இரவு சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் சில அரசியல் அறிஞர்கள் இந்த பிரச்சாரம் சில சமயங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.