ரணிலை காக்கும் கூட்டணி : தலைவர் தினேஷ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஒன்றிணைந்த புதிய அரசியல் கூட்டணியை பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் , பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இப்போதே தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த கட்சிகள், பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திரு.நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினர், SJBயில் இருந்து பிரிந்த குழு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஏனைய சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இன்னும் சில தினங்களில் மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவிருப்பதால், அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்களின் பங்கேற்புடன் இந்த புதிய கூட்டணி உருவாக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.