பதியுதீன் ஆதரவு யாருக்கு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் 6 மணித்தியாலங்களுக்கு மேல் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ள SJB கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்காது.

“மீண்டும் ரிவர்ஸ் கியரில் செல்ல முடியாது”

“ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து எமது கட்சியின் உயர்பீடம் விரிவான கலந்துரையாடலை நடத்தியது. அதன்படி 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இறுதி முடிவை எடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். நாங்கள் இன்னும் சமகி ஜன பலவேக சந்தனத்திலேயே இருக்கிறோம். , அந்த நேரத்தில் நாங்கள் அந்த கூட்டங்களில் பங்கேற்போம், SJB எங்கள் ஆதரவைக் கேட்டுள்ளது. மேலும் தற்போதைய ஜனாதிபதியும் எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார், தற்போதைய பொருளாதாரத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் ரிவர்ஸ் கியரில் செல்ல முடியாது என ரிஷாட் பதியுதீன் எம்.பி.தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.