போலீஸ் – பயணி மோதல்: முழங்கிய துப்பாக்கியால் ஒருவர் பலி.

நேற்று (07) நள்ளிரவு 12 மணியளவில் சீதுவ காவல் எல்லைக்குட்பட்ட கொட்டுகொட பகுதியில் சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த சீதுவ காவல் நிலைய அதிகாரிகள் குழு, சீதுவ திசையில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர்.

அப்போது, காரின் இடது பக்க முன் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் , போலீஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, அந்த துப்பாக்கி வெடித்து அதிகாரியின் காலிலும், அந்த நபரின் வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்துள்ளது.

இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காரில் வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் 38 வயதான பூகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சீதுவ காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.