நாமல் ஆதரவு 8 மொட்டு அமைச்சர்கள் ராஜினாமா!

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள எட்டு அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்போர், அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராக உள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தீர்மானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ய முடிவு செய்த அமைச்சர்கள் ஷசீந்திர ராஜபக்ஷ, டி. வி சானக, தேனுக விதானகமகே, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத்.

எவ்வாறாயினும், இந்த அமைச்சர்கள் எவரையும் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.