மொட்டு மாகாண சபை உறுப்பினர்கள், நாமலை கைவிட்டு ரணிலுடன் ..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் கடந்த மாகாண சபைக்கு தெரிவான பெரும்பான்மையான மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கடந்த சில நாட்களாக மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கலந்துரையாடி வந்த நிலையில், மாகாண சபை மன்றத்தின் தலைவர் ஒருவர் இந்த கலந்துரையாடல்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவர் வெற்றி பெற்ற பின், மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி மூலம் விரைவில் நடத்த சம்மதிக்க வைப்பதே இதன் நோக்கம் எனவும் அறியமுடிகின்றது.

பல வருடங்களாக மாகாண சபைகள் செயலிழந்துள்ளதாலும், அந்தந்த மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டதாலும் மாகாண சபைகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குவதே இந்த உறுப்பினர்களின் நோக்கமாகும்.

Leave A Reply

Your email address will not be published.