ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் தனிப்பட்ட ரீதியில் மகிழ்ச்சியடைவேன். விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு.

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அம்பாறையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியாது எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் , “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டு தனது சொந்த பொருளாதார தத்துவத்தின்படி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளார்.

சரியோ தவறோ, ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் பார்வைகளால் நாடு தற்போது வழிநடத்தப்படுகிறது.

“சஜித் வந்து மாற்றம் செய்தாலும் இதே நிலைதான், அநுர வந்து இடமாற்றம் செய்தாலும் இதே நிலைதான்.”

“இந்த நாடு ஒரு பயங்கரமான இடத்திற்கு விழுவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை. அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் இந்த நேரத்தில் மொட்டு வெல்ல முடியாது என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.