கொழும்பு துறைமுகத்தில் தீபற்றிய சுவிஸ் கப்பல்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜேசிடி 4 ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

துறைமுகத்தின் தீயணைப்புத் துறையினர் தீயை வெற்றிகரமாக அணைத்துள்ளனர், தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான MSC Captown கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், அதில் 995 கொள்கலன்களை இறக்கி 880 கொள்கலன்களை ஏற்றுவதற்கு தயாராக இருந்த போது தீ பற்றியதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னாட் அவர்களுக்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.