மன்னாரில்,சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி, கவனயீர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு.

மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய வேளையில் சிகிச்சையளிக்கப்படாமையால் கடந்த மாதம் (28 )உயிரிழந்த இளம் பட்டதாரிப் பெண்ணான மரியராஜ் சிந்துஜாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யக்கோரி, நாளைய தினம் (13/08) செவ்வாய்,மன்னார் பொது வைத்திய சாலை முன்பாக காலை 9.00 மணியளவில் ஜனநாயக வழியில் கவனயீர்ப்புப்,போராட்டமொன்றை முன்னெடுக்க மன்னார் பொது மக்களின் ஒன்றியம் மன்னார் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வார காலம் முடிவடைந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கெதிராகவும் இது போன்ற ஒரு கொலை இனிமேலும் இடம்பெறக் கூடாதெனவும் சிந்துஜாவிற்கு நீதிவேண்டி இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு குறித்த அமைப்பினரால்,மன்னார் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.