ஆன்லைன் விசா பிரச்சனையால் விமான நிலையத்தில் நீண்ட வரிசைகள்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏனையோருக்கு இணையத்தில் விசா வழங்கப்படாமையால் , ஆன் அரைவல் விசாவைப் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட வரிசைகள் உருவாகி வருகின்றன.

கடந்த 08.02.2016 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் வழமை போன்று இணையவழி வீசா வழங்குவதை பழைய முறையில் ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவுடன், ஆன்லைன் விசா வழங்குவது நிறுத்தப்பட்டது, மேலும் இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரே தீர்வு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து , வருகை விசாவைப் பெறுவதுதான்.

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலா சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹெரா திருவிழாவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெறுவதற்கு (On Arrival Visa) இப்பொழுது நீண்ட வரிசையில் நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.