இன்று முதல் SJB MP அணியை காப்பாற்ற சஜித்தால் முடியாமல் போகும் : பியல் நிஷாந்த டி சில்வா.

SJB கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று முதல் SJB நாடாளுமன்றக் குழுவை காப்பாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேருவிலவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சஜித் பிரேமதாச இப்போது காலை முதல் இரவு வரை, இரவு முதல் காலை வரை தனது எம்.பி.க்கள் குழு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்று முதல் SJBக்கு நெருக்கடியான காலம் வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அபார வெற்றி பெறுவார்.
NPP அனுரவோ , SJB சஜித்தோ அதனைத் தடுக்க முடியாது என்றார் அவர்.