மன்னார் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மன்னார் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனை கைவசம் வைத்திருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (12.08) ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.