பாடசாலை மாணவியை 22 மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த குற்றத்தை மூடி மறைத்த அதிபர், ஆசிரியர் மற்றும் 02 பெண் ஆசிரியைகள் கைது

தனமல்வில தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயது சிறுமியை மாணவர்கள் குழுவொன்று கூட்டுப் பலாத்காரம் செய்தமை தொடர்பான தகவல்களை மறைத்த தனமல்வில தேசிய பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் ஒழுக்காற்று குழுவின் இரண்டு பெண் ஆசிரியைகள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிறுமி , 22 பாடசாலை மாணவர்களால் 07 தடவைகள் கூட்டுப் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன், பாடசாலை ஒழுக்காற்று குழு மற்றும் அதிபருக்கு இது தெரிந்திருந்தும், பாடசாலைக்கு அவப்பெயர் ஏற்படும் என கருதி இவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 17 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு மாணவனின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர குற்றத்தை மறைக்குமாறு மாணவிக்கு அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான சட்ட வைத்திய பரிசோதனைக்கு பொறுப்பான தங்கல்ல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மாணவியை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.