தீக்குழியில் விழுந்த சிறுவன்: பதற வைக்கும் காணொளி.

சென்னை அருகே தீமிதித் திருவிழாவில் ஏழு வயது சிறுவன் தீயில் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள எளாவூா் காட்டுக்கொல்லைமேடு கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.

அந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டியும் ஆடித் திருவிழாவை முன்னிட்டும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) தீமிதித் திருவிழா நடத்தப்பட்டது.

அதற்காக, ஏறக்குறைய 100 பக்தர்கள் காப்புக் கட்டி 11 நாள் விரதம் இருந்து தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்த காத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.