‘தயவுசெய்து நாமலுக்கு ஆதரவளியுங்கள்’ வெளியேறிய எம்.பி.க்களிடம் மஹிந்த வேண்டுகோள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது மகன் நாமலுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.