தொலைபேசியோடு இணைந்த பதியுதீனைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ரணிலுடன்…

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

SJBயை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பிரவேசித்த , இஷான் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் SJBயை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு உறுப்பினராக றிஷாத் பதியுதீன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.