மைத்திரி ரணிலிடம் ‘நான் உதவிக்கு வரட்டுமா?’ : ஐயோ ஆளை விடு சாமி என ரணில் கைகழுவல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தாம் விரும்பவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தற்போது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அவரை ஏற்றுக்கொள்ள எந்தக் கட்சியும் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இவ்வளவு கீழ் நிலைக்கு தள்ளப்பட்டமை குறித்து தமது கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் வருத்தமடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.