ஷீன் தோட்டத்தில் 24 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.

16 ஆம் திகதி இரவு, புடலுஓயா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஷீன் தோட்டத்தில் திடீர் தீ பரவியதாக தகவல் கிடைத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் தீயை அணைத்தனர். .
தீயினால் சுமார் 24 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், 17 வீடுகளின் சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடலூயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.