அரசு வழங்கும் சிறப்பு உதவித்தொகை குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் தேர்தல் ஆணையம், திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி அங்கு 3000 ரூபாவை அரசாங்கம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.