நாடு நெருக்கடியான நேரத்தில் பொறுப்புகளை ஏற்காமல் ஏன் ஓடினீர்கள் என்று சொல்லுங்கள்… பதில் சொல்லாவிட்டால் இருவரும் இந்த மேடைக்கு வந்து எனக்கு இருபுறமும் உட்காருங்கள்… ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது பொறுப்பேற்காமல் ஓடிய சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் எதற்காக ஓடினர் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் பதில் சொல்ல முடியாவிட்டால் மேடையில் ஏறி எனக்கு இருபுறமும் அமருமாறும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பொதுக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.