நான் ஜனாதிபதியானதும் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் – அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான திட்டங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் கீழ் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இழந்த வரி வருவாயை ஈட்டும் வகையில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டு அது தொடர்பான வரித் திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.

தங்காலை பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.