பல பகுதிகளில் வெள்ளம் : அவதானம்.

கடும் மழைக்கு மத்தியில் குடா ஓயாவின் நீர் மட்டம் உயர்வதால் களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, புலத்சிங்கல, பாலிந்தநுவர மற்றும் மதுராவல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடா கங்கை மற்றும் மகுர கங்கை நிரம்பி வழியும் பகுதிகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளின் ஊடாக செல்லும் பக்க வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.