அநுர ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்.. ஜனாதிபதி பதவி கடிதத்தை வாங்க மட்டுமே உள்ளது – டில்வின் சில்வா.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிக்கும் வேளையிலேயே தமது கட்சியின் வேட்பாளர் அனுர திஸாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கைகளில் இருந்து அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாகும் கடிதத்தை பெற்றுக்கொள்வது மாத்திரமே மீதியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் வெற்றி உறுதி என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தங்காலை பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.