Focus ரணிலில் மட்டுமே! – அரகலய பாடகியின் புதிய மும் மொழி பாடல் (வீடியோ)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெற்ற கன்னி ஜன பேரணியில் மும் மொழியிலான புதிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் சேவைகளை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது பிரஜைகளின் பொறுப்பு என்றும், அதை காக்க கவனமுடன் செயற்பட வேண்டும் என்றும் ‘ஃபோகஸ் குரூப்’ பிரஜைகளுக்கு வலுவாகப் பரிந்துரைத்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளது.

இந்த பாடலை இளம் தலைமுறை பாடகியான எரண்தி மதுஷிகா பாடியுள்ளார், இவர் இதற்கு முன்பு பிரபல பாடலான அரகலய காலத்து “அபி சீருவென் ” எனும் பாடலைப் பாடியுள்ளார்.

தேசிய நல்லிணக்க இளைஞர் நிகழ்ச்சிக்காக (Youth Vote Force) “அபி சீருவென் பாடல்” முதன் முதலில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்டது. அது அக்டோபர் 27, 2019 அன்று.

Leave A Reply

Your email address will not be published.