யாழில் விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் இன்று கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் மாவட்ட செயலகத்துக்குச் சற்றுத் தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளது என்று யாழ். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்குப் பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.

அதன்போது, விடுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய மூன்று யுவதிகளைப் பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி மூன்று யுவதிகளையூம் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.