கட்சி தாவும் தவளை அரசியலுக்கு எமது ஆட்சியில் முடிவு கட்டுவோம் – தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர திட்டவட்டம்.

கட்சி தாவும் தவளை அரசியலுக்குத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் மேலும் உரையரறுகையில்,

“இந்தப் பக்கம், அந்தப் பக்கம் எனக் கட்சி தாவல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான தவளை அரசியலை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தவளை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

எமது நாட்டுக்குக் கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது. தாவும் அரசியல் தவளைகளுக்கு எமது அணியில் இடமில்லை.

இவ்வாறு தாவும் தவளைகள் இணைந்து கூட்டணிகள் அமைத்திருந்தாலும் அவை எமக்குச் சவாலாக அமையாது. கட்சி தாவினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்குரிய சட்டம் இயற்றப்படும். தற்போது அந்தச் சட்டம் இருந்தாலும் அதனைப் பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும். அசிங்கமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.