இருபது பேர் மட்டுமே ….. சஜித்தின் மாநாடு ரத்து..

எதிர்க்கட்சித் தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த கூட்டு சுகாதார வல்லுநர் மாநாடு இடைநிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட இருபது சுகாதார வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டதே அதற்குக் காரணம்.

கொழும்பு கண்காட்சி மையத்தில் நேற்று நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாடு காலை 09.00 மணிக்கு தொடங்குவதாக இருந்தது, ஆனால் 10.30 மணி வரை மாநாட்டை தொடங்க போதிய ஆட்கள் இல்லாததால் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் சுகாதார நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாநாடு பிற்போடப்பட்டதாகவும், மீண்டும் நடத்துவதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.