நான் ஜனாதிபதியாவேன் என கணக்கெடுப்பு தகவல் கிடைத்தது – சஜித் பிரேமதாச.

அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி இந்த நாட்டின் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து SJB வெல்லப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பேருந்து நிலையத்தில் (19) நடைபெற்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பேரணியை சமகி SJB நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ ஏற்பாடு செய்திருந்ததுடன், இந்த பேரணியில் திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், வி. ராதாகிருஷ்ணன், சுஜிவ சேரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.