பொடி பெட்டி சுவிட்சர்லாந்தில் கைது.

சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் “பொடி பெட்டி”யை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவரது கைரேகைகளை பரிசோதனை செய்ய ஆதரவை வழங்குமாறு அதிகாரிகள் இலங்கையிடம் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், “பொடி பெட்டி”யை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
““பொடி பெட்டி” சமீபத்தில் பெலாரஸில் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலக தலைவர்கள் உள்ளிட்ட 168 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் பெரும்பாலான குற்றவாளிகள் துபாய் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்