இவ்வருடம் இதுவரை வீதி விபத்துக்களில் 1,417 பேர் சாவு!

இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 1,000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்று போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

“வருடாந்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துக்களில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து. 2023இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளன. 2024 ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 10 வரை, 1,352 ஆபத்தான வீதி விபத்துகளில், 1,417 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.