மன்னார் நகரில் எலக்ட்ரோனிக் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் எலக்ட்ரிக்  மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை மன்னார் நகரில் முதல் முறையாக இன்று (22) காலை 10 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் நகரில் 20 வருடங்களுக்கு மேலாக இரண்டு சக்கர மோட்டார் வாகன விற்பனைச் சேவையை வழங்கி வரும் மேசியா நிறுவனமானது மக்களின் போக்குவரத்துக்காக தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சர்வதேச தரத்தைக் கொண்ட (YADEA) யடியா உற்பத்தி நிறுவனத்தின்
எலக்ட்ரோனிக் மோட்டார் சைக்கிளை இன்று மன்னார்ப் பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வில் கொழும்பிலிருந்து வருகை தந்த யடியா (YADEA )இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் மற்றும் வடக்கு பிராந்திய முகாமையாளர். உட்பட மெசியா நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணிப்பாளர் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.