மரமொன்றில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்.

புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் (வயது 37) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஓட்டோவும், இரண்டு பாதணிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்தன என்றும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நாசிம் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து, அங்கு முதற்கட்ட மரண விசாரணையை நடத்தி, புத்தளம் மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கமைய சடலத்தைப் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.