தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் :

பொருள்அளவு

சீரக சம்பா அரிசி அரை கிலோ
மட்டன் அரை கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய்2
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தயிர் 1 கப்
மிளகாய்த்தூள் 4 டேபிள் ஸ்பூன்
பட்டை சிறிது
கிராம்பு 2
ஏலக்காய் 2
எலுமிச்சம் பழம் பாதி
எண்ணெய் தேவைக்கேற்ப
நெய் தேவைக்கேற்ப
டால்டா தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்

நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.

அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அரிசி வெந்ததும், நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

Leave A Reply

Your email address will not be published.