கிளப் வசந்த கொலையில் சம்பந்தப்பட்ட 2 சந்தேகநபர்கள் கைது!

சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவரின் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
31 வயதான பெட்டி அரம்பகே அஜித் ரோஹன இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்கின்றன.
அத்துடன் அத்துருகிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பேருந்தில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற நபரான 29 வயதுடைய தாருகார வருண இந்திக்காத சில்வா என்ற சந்தேக நபரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் கீழ் அதன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து டி-56 துப்பாக்கி, 120 தோட்டாக்கள் மற்றும் 9 மி.மீ பிஸ்டல் தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.