தலதாவை அழைக்கும் சிறிகொத்த தலைமையகம்..

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்கு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், SJB பதவியையும் இராஜினாமா செய்த திருமதி தலதா அத்துகோரளவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பேரணியில் பங்கேற்குமாறும் தலதா அத்துகோரளவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.