ரணிலால் முடியும் என பிள்ளையானும் கூறுகிறார்!

நெருக்கடி நிலையின் போது நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷவை நியமித்தமை குறித்து வெட்கப்படுகிறேன் எனவும், நெருக்கடி நிலையைப் பொறுப்பேற்று நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , நாட்டை மீட்க முடியும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கல்லடியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிள்ளையான் மேலும் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டத்தால் நாடு அராஜகமானது. கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு பங்களித்தமைக்காக அன்று நான் வெட்கப்பட்டேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. அவரை ஜனாதிபதியாக நியமிக்க நாங்களும் ஆதரவளிக்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கின் அபிவிருத்தியான விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் பல திட்டங்களை முன்வைத்துள்ளார். அதற்கான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக வீடு வீடாகச் சென்று மக்களை ஒன்று திரட்டி வருகின்றோம். அந்தவகையில் ஜனாதிபதியின் வெற்றியைப் போன்று இம்மாவட்ட மக்களாகிய நாமும் வெற்றிபெற முடியும்.

Leave A Reply

Your email address will not be published.