சமூக வலைதளங்களில் இருந்து “சேறடிப்பு பதிவுகள்” நீக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க யூடியூப், பேஸ்புக், அவெர்டர் மற்றும் இன்ட்ராகிராம் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.

அவர்களுடனான கலந்துரையாடலின் போது அவ்வாறான உள்ளடக்கத்தை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீக்கப்படும் என்றும் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்ததாக தலைவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள கணக்குகளில் அவதூறான தகவல்களை பதிந்தால், தேர்தல் நடைபெறும் காலத்திற்கு உரிய கணக்குகளை முடக்கவும் முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்காக சமூக ஊடகங்களை கண்காணிக்கும் திறன் கொண்ட நிறுவனங்களின் சேவையை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.