அனுரவின் வருமான வரிப் பேச்சு தொடர்பாக ஹர்ஷ தாக்குதல்.. அதிக வரி விதிக்கப்பட வேண்டி வருமா ? இல்லையா? பதில் சொல்லுங்கள்? (வீடியோ)

வருமான வரி வரம்பு 1லட்சம் ரூபாவிலிருந்து 2 லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டால் வரி செலுத்துவோர் செலுத்த வேண்டிய வரிப்பணம் பாரியளவில் அதிகரிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரி வரம்பு இரண்டு இலட்சமாக உயர்த்தப்பட்டால் தற்போது வரி செலுத்தும் பெருமளவிலான மக்கள் வெளியேறுவார்கள் என SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

இதனால் நடக்கப் போவது , வருமான வரித் தொகையை அதே அளவில் பராமரிக்க வரி செலுத்துபவர்களிடம் அதிக வரி விதிக்கப்பட வேண்டி வரலாம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.