அநுரவிற்கோ அல்லது சஜித்துக்கோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது.. ரணிலால் மட்டுமே முடியும்..- அரகலய தலைவர் பெத்தும் கெர்னர் (Video)

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களாக சஜித் பிரேமதாச அல்லது அநுர திஸாநாயக்க முன்வைக்கும் கொள்கைகளால் ஒரு நாடு முன்னேற முடியாது என காலிமுகத் திடல் அரகலய போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த Dr.பெத்தும் கேர்னர் தெரிவித்துள்ளார். (வைத்தியர் பெத்தும் கேர்னர்தான் அரகலயவை ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது)

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார நெருக்கடியை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளதாகவும் , விக்கிரமசிங்க தனது அனுபவத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தை நிர்வகித்தமை பாராட்டப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும், அவர் அமைச்சராக இருந்தபோதும் நிர்வாகத் திறனைக் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய அலை ஒரு பேரழிவு நிலை என்று தோன்றுவதாகவும், அவர்கள் நாட்டை நிர்வகித்தால் நாடு தவறான பாதையில் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.