இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்… அவசர நிலை பிரகடனம் (Video)

இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போவதாக ஹெஸ்புல்லா அறிவித்துள்ளது.

இதனால், இஸ்ரேலில் 48 மணி நேரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலை குறிவைத்து ஹெஸ்புல்லா அமைப்புக்கள் 320 ரொக்கட் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் இன்னும் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதத்திற்கு முன்னர் ஹெஸ்புல்லா இராணுவ தலைவரை கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலை நோக்கி இந்த தாக்குதல்களை ஹெஸ்புல்லா நடத்துகிறது.

ஹெஸ்புல்லா தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.