யாழ். பிறவுண் வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த ப.ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது மகனைத் தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை, பிறவுண் வீதியில் ஓட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.