சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை – வவுனியா வடக்கில் கொடூரம்.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

அந்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது விருந்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கனகராயக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.