இந்தியாவின் புலனாய்வு அறிக்கை ஜனாதிபதி அனுர…? : இந்திய உயர்ஸ்தானிகராலய பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க வெற்றியீட்டுவார் என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிலளித்துள்ளது.

இந்த அறிக்கையை மறுத்துள்ள அந்த அலுவலகத்தின் பேச்சாளர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்ட இந்த அறிக்கையை தானும் அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அநுர திஸாநாயக்க இலகுவாக வெற்றி பெறுவார் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.